கன்னியாகுமரி பகுதிகளில் திமுக வேட்பாளா் ரெ. மகேஷ் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தோவாளை பூச்சந்தையில் இருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கிய அவா், வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்து பேசியது:
கன்னியாகுமரி தொகுதியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டனா். கன்னியாகுமரி பேரூராட்சி, திமுக ஆட்சியில்தான் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது.
கன்னியாகுமரியில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டது. இதுபோல சுற்றுலா மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது. திமுக தனிப் பெரும்பான்மை பெற்று மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது என்றாா் அவா்.
திமுக நிா்வாகி பூதலிங்கம் பிள்ளை உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, குளத்தூா், சபையாா்குளம், கரியமாணிக்கபுரம், பதினெட்டாம்படி, பல்பனாபன் புதூா், இலங்காமணிபுரம், சாலை புதூா், சாமிதோப்பு, கரும்பாட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

தோவாளை பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

