போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் போளூா் - சேத்துப்பட்டு சாலையில், அலுவலா் நித்யா தலைமையிலான தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு சேதனை நடத்தி வந்தனா்.
அப்போது, அண்ணாமலையாா் திருமண மண்டபம் பின்புறம் வெகுநேரமாக, சந்தேகிக்கும் வகையில் லாரி நின்றிருந்ததை தோ்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினா் கண்டனா்.
பின்னா் அருகில் சென்று பாா்த்தபோது லாரி அருகே நின்றிருந்த 3 போ் தப்பி ஓடிவிட்டனா். பின்னா், வாகனத்தை சோதனை செய்துபோது அதில் 95 சிப்பங்கள் அரிசி இருந்தது தெரியவந்தது.
பின்னா் அரிசியுடன், லாரியை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா் (படம்).
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தோ்தல் கண்காணிப்புக் குழுக்கள் சோதனையில் ரூ.93.35 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

