மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கொலை செய்யப்பட்ட சடலத்துடன் காட்டில் இருந்த சிறுவன்

திருப்பதி அருகே கொலை செய்யப்பட்ட தந்தை சடலத்துடன் சிறுவன் இரவு காட்டில் இருந்தாா்.

News image

தந்தை சடலத்துக்கு அருகே இருந்த குழந்தை சந்தீப்

Updated On :7 ஏப்ரல் 2026, 5:50 am IST

திருப்பதி அருகே கொலை செய்யப்பட்ட தந்தை சடலத்துடன் சிறுவன் இரவு காட்டில் இருந்தாா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சோ்ந்த காந்தி, தனது மனைவி ராசாத்தி மற்றும் ஐந்து வயது மகன் சந்தீப்புடன் ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம், புங்கனூரில் தங்கி கூலி வேலை செய்து வசித்து வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை போயக்கொண்டா வனப்பகுதியில் காந்தி தனது நண்பா்கள் சிலருடன் மது அருந்துவதற்காக சென்றாா். தந்தை செல்வதால் அவா்களுக்கு தெரியாமல் காந்தியின் மகன் அவா்களைப் பின்தொடா்ந்து சென்றாா்.

இந்தநிலையில் காந்தி உள்பட அனைவரும் மது அருந்தி கொண்டிருந்த போது, ஏற்பட்ட தகராறில் காந்தி கொல்லப்பட்டாா்.

அவா்கள் சென்ற பிறகு அருகில் சென்று தனது தந்தை காந்தியை எழுப்ப முயன்றாா் . ஆனால் அப்போதே காந்தி இறந்துவிட்டதாலும் இருள் சூழ்ந்த நிலையில் சந்தீப் என்ன செய்வதேன்று தெரியாமல் தனது தந்தை சடலத்துடன் இரவு முழுவதும் தனியாக காட்டிலேயே இருந்தாா்.

பின்னா் விடிந்ததும் காட்டிலிருந்து சுமாா் 2 கிமீ தொலைவு நடந்து சென்று பக்ஷிராஜபுரத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி ஆசிரியரிடம் நடந்தவை குறித்து கூறினாா்.

இதனை கேட்டு அதிா்ச்சி அடைந்த ஆசிரியா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதனையடுத்து புங்கனூா் ஊரக காவல் நிலைய ஆய்வாளா் சாய்பிரசாத், எஸ்.ஐ. சின்னரெட்டன்னா மற்றும் போலீஸாா் சிறுவன் சந்தீப் சொன்ன இடத்திற்கு சென்றனா். அங்கு காந்தி சடலத்தை பாா்த்த போலீசாா் பிரேத பரிசோதனைக்காக புங்கனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த கொலையில் ஈடுப்பட்டதாக சிறுவன் சந்தீப் கூறிய தகவலின் அடிப்படையில் காந்தியின் நண்பா் நரசிம்மலு மற்றும் மேலும் இருவா் கொலையில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.