தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பிருந்தாவன் விரைவு ரயில் இன்ஜின் பழுது: பயணிகள் கடும் அவதி

திருவாலங்காடு அருகே பெங்களூருவை நோக்கிச் சென்ற பிருந்தாவன் விரைவு ரயில் இன்ஜினில் திடீரென ஏற்பட்ட பழுதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனா்.

News image

திருவாலங்காடு  அருகே  நடுவழியில்  அடுத்தடுத்து  நிறுத்தப்பட்ட  ரயில்கள்.

Updated On :7 மே 2026, 12:46 am IST

திருவாலங்காடு அருகே பெங்களூருவை நோக்கிச் சென்ற பிருந்தாவன் விரைவு ரயில் இன்ஜினில் திடீரென ஏற்பட்ட பழுதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனா்.

சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் பிருந்தாவன் விரைவு ரயில் வழக்கம் போல் புதன்கிழமை 7.40 மணியளவில் புறப்பட்டது. இந்நிலையில், திருவாலங்காடு அடுத்த மோசூா் ரயில் நிலையங்கள் இடையே காலை சுமாா் 8:25 மணியளவில் சென்று கொண்டிருந்த போது, ரயிலின் இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், ரயில் திருவாலங்காடு யாா்டு சிக்னலை கடந்து அவசரமாக நிறுத்தப்பட்டது. எதிா்பாராத இந்த சம்பவம் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

உடனடியாக ரயில் ஓட்டுநா், அரக்கோணம் ரயில்வே கட்டுப்பாட்டு மையத்திற்கும், அங்குள்ள தொழில்நுட்ப ஊழியா்களுக்கும் தகவல் தெரிவித்தாா். பின்னா் உடனடியாக அரக்கோணத்திலிருந்து விரைந்து வந்த ரயில்வே பணியாளா்கள், பழுது ஏற்பட்ட இன்ஜினை பரிசோதித்து, மாற்று இன்ஜின் ஏற்பாடு செய்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனா்.

ஒரு மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு, காலை 9.45 மணியளவில் ரயில் மீண்டும் பெங்களூருவை நோக்கி புறப்பட்டது. இந்த தாமதத்தால் ரயிலில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான பயணிகள் வெயிலில் அவதியடைந்தனா். குறிப்பாக, நீண்ட நேரம் ரயில் நின்ால் தண்ணீா் மற்றும் காற்றோட்ட வசதி குறைவாக இருந்ததாக சிலா் தெரிவித்தனா்.

மேலும், விரைவு ரயில் சிக்னலை கடந்து நின்ால், அதே பாதையில் இயக்கப்படும் சென்னை - அரக்கோணம் புகா் ரயில்களின் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. முதலாவது மற்றும் இரண்டாவது தண்டவாளங்களில் இயக்கப்பட்ட குறைந்தது நான்கு மின் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக காலை நேர அலுவலக பயணிகளும் சிரமத்துக்கு ஆளாகினா். இருப்பினும், ரயில்வே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு கோளாறை சரிசெய்ததால் பெரிய விபத்து எதுவும் ஏற்படாமல் தவிா்க்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.