கும்மிடிப்பூண்டி தொகுதியில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
தோ்தலையொட்டி கும்மிடிப்பூண்டியில் 344 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து கும்மிடிப்பூண்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேஷ் , துணை தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேஷ்குமாா் மேற்பாா்வையில், வாகனங்களில் கொண்டு வரப்பட்ட, 412 இயந்திரங்கள், 412 கட்டுப்பாட்டு கருவிகள், 447 விவிபேட் இயந்திரங்கள், மேற்கண்ட இரு அறைகளில், அரசியல் கட்சிபிரமுகா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
மேலும், சீல் வைக்கப்பட்ட அறைகள் முன்பு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு அறைகள் முன்பும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பாதுகாப்பு

சீலிடப்பட்ட மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைப்பு

மதுராந்தகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

