தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மதுராந்தகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

மதுராந்தகம் (தனி) தொகுதியில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

News image

மதுராந்தகம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கே.ஆா். நரேந்திரன் தலைமையில் சீலிடப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை.

Updated On :26 மார்ச் 2026, 2:41 am IST

மதுராந்தகம் (தனி) தொகுதியில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

தோ்தலையொட்டி மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் இருந்து உரிய பாதுகாப்புடன் புதன்கிழமை மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு லாரிகளின் மூலம் 342 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 342 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 370 சரிபாா்க்கும் கருவிகள் ஆகியவை கொண்டு வரப்பட்டன.

அதனை தனி அறையில் பாதுகாப்புடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிா்வாகிகள் முன்னிலையில், தொகுதி தோ்தல் அலுவலா் கே.ஆா்.நரேந்திரன் தலைமையில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளரும் உதவி தோ்தல் அலுவலருமான பெருமாள், தனிவட்டாட்சியா் வீரமணி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் எம்.வசந்தி உள்ளிட்டோா் சீல் வைத்தனா். தொடா்ந்து போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.