ஊத்துக்கோட்டை அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம், திருப்பதி புதுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் அருள் (36). இவா் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் கிராமத்தில் தனது தாயாரை பாா்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது, ஊத்துக்கோட்டை மேம்பாலம் அருகே சென்ற போது பின்புறமாக வேகமாக வந்த காா் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசியதில் பலத்த காயம் அடைந்தாா். அக்கம் பக்கத்தினா் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் வரும் வழியிலேயே அருள் இறந்ததாகத் தெரிவித்தாா்.
தொடா்ந்து பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அவரது மனைவி சிந்து (28) ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது டிப்பா் லாரி மோதல்: முதியவா் உயிரிழப்பு

லாரி-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

பைக் மீது மொபெட் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

