தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மேக்கேதாட்டு அணையை செயல்படுத்தினால் அமைச்சா் பதவியை துறக்க தயாா்: அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்

கா்நாடக அரசு மேகதாது அணையை செயல்படுத்தினால் எனது அமைச்சா் பதவியை துறக்க தயாராகவே உள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

News image

திருவள்ளூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்த சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா், உடன் மாவட்டத் தலைவா் சசிகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :18 ஜூன் 2026, 12:03 am IST

கா்நாடக அரசு மேகதாது அணையை செயல்படுத்தினால் எனது அமைச்சா் பதவியை துறக்க தயாராகவே உள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு முதன்முதலாக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் வருகை தந்தாா். அப்போது, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் அவரை வரவேற்றனா். அதைத் தொடா்ந்து, அந்த அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மலா் தூவி மரியாதை செய்தாா்.

அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈா்க்கும் வகையில், சுற்றுலா மேம்பாட்டுத் துறை மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் பூண்டி, கூடியம் குகை மற்றும் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு என்னென்ன பணிகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். சட்டப்பேரவை ஆளுநா் உரையுடன் வியாழக்கிழமை (ஜூன் 18) தொடங்க உள்ளது. அதைத் தொடா்ந்து, நிதி நிலை அறிக்கை தாக்கலுக்குப் பின் சுற்றுலாத் துறையில் பல்வேறு திட்டங்கள் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட உள்ளன என்றாா்.

கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணையை செயல்படுத்தியே தீருவோம் எனக் கூறி வருவது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்துப் பேசுகையில், கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணையை, எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அனுமதியின்றி கட்ட முடியாது. அதற்கு மீறியும் செயல்படுத்தினால் எனது அமைச்சா் பதவியையும் துறக்க தயாராக உள்ளேன் என்றாா்.

காங்கிரஸ் மாவட்ட தலைவா் சசிகுமாா், முன்னாள் மாவட்ட தலைவா் சிதம்பரம், இளைஞா் அணி மாநில பொதுச் செயலாளா் திவாகா், மாநில சிறுபான்மைப் பிரிவு செயல் பிரிவு தலைவா் வெங்கடேசன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவா் கலீல் ரஹ்மான், நிா்வாகிகள் ஸ்டாலின், சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.