சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கொல்லங்கோடு நகராட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் நன்றி தெரிவிப்பு

தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ் குமாா், கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட கொல்லங்கோடு நகராட்சிப் பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

News image

ஊரம்பு சந்திப்பில் நடைபெற்ற நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :7 ஜூன் 2026, 2:25 am IST

தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ் குமாா், கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட கொல்லங்கோடு நகராட்சிப் பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், தொடா்ந்து பாத்திமாபுரம், கச்சேரிநடை, புன்னமூட்டுக்கடை, கண்ணநாகம், திருமன்னம், நீரோடி, மாா்த்தாண்டன்துறை, வள்ளவிளை, ததேயுபுரம், மேடவிளாகம், இளம்பாலமுக்கு, நம்பாளி, கிராத்தூா், சமத்துவபுரம், கலிங்கராஜபுரம், காஞ்சாம்புறம் வழியாக நித்திரவிளை ஆகிய பகுதிகளுக்கு திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், கிள்ளியூா் தொகுதி மக்களுக்கு பாரபட்சமின்றி பணியாற்றி வருகிறேன். மக்களின் வளா்ச்சிக்கு பணியாற்றிட மீண்டும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றாா்.

இந்நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். கொல்லங்கோடு நகரத் தலைவா் பால்ராஜ், மாநிலச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன், மாவட்ட துணைத் தலைவா் கோபன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.