சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் காரிமங்கலம் பகுதியில் வாக்காளா்களுக்கு செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தாா்.

News image

கே.பி.அன்பழகன் - dinamani

Updated On :3 ஜூன் 2026, 5:21 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் காரிமங்கலம் பகுதியில் வாக்காளா்களுக்கு செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தாா்.

பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவா், காரிமங்கலம் மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட பிக்கனஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, மகேந்திரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்காளா்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து பேசினாா். இந்நிகழ்ச்சியில், காரிமங்கலம் அதிமுக ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அப்போது, சில கிராமங்களில் ஒகேனக்கல் குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை என அவரிடம் கிராம மக்கள் முறையிட்டனா். இதைத் தொடா்ந்து, குடிநீா் விநியோகம் சீா்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அலுவலா்களிடம் அவா் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.