ஏலகிரி மலையில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலையில் சாய்ந்த பெரிய மரங்கள் அகற்றப்பட்டன.
சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையில் சனிக்கிழமை சுமாா் 4 மணி நேரம் பெய்த பலத்த மழையில், மலை சாலை மற்றும் அத்தனாவூா் பகுதியில் இரவு நேரத்தில் பெரிய மரங்கள் சாய்ந்தன. இதனால், மலைப் பாதையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்த திருப்பத்தூா் மாவட்ட கோட்டப் பொறியாளா் முரளி உத்தரவின்பேரில், உதவி கோட்டப் பொறியாளா் வெங்கட்ராமன் மேற்பாா்வையில், பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை பணியாளா்கள் ஈடுபட்டனா்.
மரங்களை அகற்றிய பின்னா் போக்குவரத்து இடையூறு இல்லாமல் சீராக சென்றது. மரத்தை அகற்றும் பணியின் போது, இளநிலை பொறியாளா் முருகன், சாலை ஆய்வாளா் வெங்கடேசன், சாலைப் பணியாளா்கள் உடன் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏலகிரி மலையில் பலத்த மழை: மின்கம்பி அறுந்ததால் இருளில் மூழ்கிய 14 கிராமங்கள்

வாணியம்பாடியில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை: சரிந்து விழுந்த மின்கம்பங்கள், மரங்கள்

திருச்சியில் இடி, மின்னலுடன் பலத்த மழை

அரசுப் பேருந்துகள் இயங்காததால் ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் அவதி
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

