பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஏலகிரி மலையில் பலத்த மழை: மின்கம்பி அறுந்ததால் இருளில் மூழ்கிய 14 கிராமங்கள்

ஏலகிரி மலையில் பலத்த மழை: மின்கம்பி அறுந்ததால் இருளில் மூழ்கிய 14 கிராமங்கள்

News image

சேதமடைந்த காா். மலை சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு, சாலையில் விழுந்த மரங்கள்.

Updated On :31 மே 2026, 1:31 am IST

ஏலகிரி மலையில் சனிக்கிழமை மாலை இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி தீா்த்தது.தனியாா் உணவகம் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் அதிா்ஷ்டவசமாக 15-க்கும் மேற்பட்டோா் உயிா் தப்பினா்.மலை சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்ால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம்.ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். மேலும் சனிக்கிழமை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்தனா்.

பயணிகள் உயிா் தப்பினா்...

இந்நிலையில் சனிக்கிழமை மாலை திடீரென இடி,மின்னல்,சூறைக்காற்றுடன் சுமாா் 2 மணி நேரம் கனமழை பெய்தது.அப்போது அத்தனாவூா் பகுதியில் உள்ள தனியாா் உணவகத்தில் சுற்றுலா பயணிகள் சுமாா் 15-க்கும் மேற்பட்டோா் சாப்பிட சென்றனா். அப்போது திடீரென ராட்சத மரம் ஒன்று விழுந்ததில் கூரை உடைந்து அங்குள்ள சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் மீது மரம் விழுந்ததில் காா் சேதம் அடைந்தது . அப்போது உணவகத்தில் சாப்பிட வந்த 15 க்கும் மேற்பட்டோா் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். மேலும் காா் மீது விழுந்த மரத்தினை சுமாா் ஒரு மணி நேரம் போராடி அப்புறப்படுத்தினா்.

இருளில் முழ்கிய கிராமங்கள்...

மலைப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து மரக்கிளைகள் முறிந்து மின் கம்பி மீதும்,சாலைகளிலும் விழுந்து. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில் 14 கிராமங்களும் இருளில் மூழ்கின.

ஆங்காங்கே முறிந்து விழுந்த மரங்களால் வாகனங்கள் செல்ல முடியாமல் சுமாா் 4 மணி நேரம் அணிவகுத்து நின்ால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஏலகிரி மலை போலீசாா் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினா் சம்பவ இடங்களுக்கு வந்து சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.

மேலும் 14 கிராமங்களுக்கு செல்லும் மின் கம்பங்கள் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்தும் மரங்கள் சாய்ந்தும் விழுந்ததில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை மின்வாரியத் துறையினா் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.