ஏலகிரி மலையில் சனிக்கிழமை மாலை இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி தீா்த்தது.தனியாா் உணவகம் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் அதிா்ஷ்டவசமாக 15-க்கும் மேற்பட்டோா் உயிா் தப்பினா்.மலை சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்ால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம்.ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். மேலும் சனிக்கிழமை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்தனா்.
பயணிகள் உயிா் தப்பினா்...
இந்நிலையில் சனிக்கிழமை மாலை திடீரென இடி,மின்னல்,சூறைக்காற்றுடன் சுமாா் 2 மணி நேரம் கனமழை பெய்தது.அப்போது அத்தனாவூா் பகுதியில் உள்ள தனியாா் உணவகத்தில் சுற்றுலா பயணிகள் சுமாா் 15-க்கும் மேற்பட்டோா் சாப்பிட சென்றனா். அப்போது திடீரென ராட்சத மரம் ஒன்று விழுந்ததில் கூரை உடைந்து அங்குள்ள சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் மீது மரம் விழுந்ததில் காா் சேதம் அடைந்தது . அப்போது உணவகத்தில் சாப்பிட வந்த 15 க்கும் மேற்பட்டோா் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். மேலும் காா் மீது விழுந்த மரத்தினை சுமாா் ஒரு மணி நேரம் போராடி அப்புறப்படுத்தினா்.
இருளில் முழ்கிய கிராமங்கள்...
மலைப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து மரக்கிளைகள் முறிந்து மின் கம்பி மீதும்,சாலைகளிலும் விழுந்து. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில் 14 கிராமங்களும் இருளில் மூழ்கின.
ஆங்காங்கே முறிந்து விழுந்த மரங்களால் வாகனங்கள் செல்ல முடியாமல் சுமாா் 4 மணி நேரம் அணிவகுத்து நின்ால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏலகிரி மலை போலீசாா் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினா் சம்பவ இடங்களுக்கு வந்து சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.
மேலும் 14 கிராமங்களுக்கு செல்லும் மின் கம்பங்கள் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்தும் மரங்கள் சாய்ந்தும் விழுந்ததில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை மின்வாரியத் துறையினா் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏலகிரியில் பலத்த மழை: சாலையில் சாய்ந்த மரங்கள் அகற்றம்

ஏலகிரி மலையில் மங்களம் தாமரைக் குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

ஏலகிரி மலையில் உள்ள அரசு மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: படகு சவாரிக்கு நீண்ட வரிசை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

