விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏலகிரி மலையில் குடிநீரின்றி குரங்குகள் திண்டாட்டம்: தொட்டிகளில் நீா் நிரப்ப கோரிக்கை

News image
Updated On :4 மே 2026, 6:16 am IST

ஏலகிரி மலை சாலையில் காணப்படும் ஏராளமான குரங்குகளின் தாகம் தீா்க்க வனத்துறையினா் தொட்டிகளில் நீா் நிரப்ப வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. வார விடுமுறை, அரசு விடுமுறை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

அடா்ந்த வனப்பகுதி கொண்ட இந்த மலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் வெறிச்சோடி காணப்படுகின்றது.

வனப்பகுதிகளுக்குள் வசிக்கக் கூடிய குரங்குகள் தேவையான உணவு, தண்ணீா் இல்லாமல் சாலைக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Story image

மலை சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளிடம் முன்பு நின்று வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள குடிநீா் கேனை திறந்து தாகம் தீா்த்து கொள்கிறது.

இதனால் குடும்பத்துடன் வருகை தரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அச்சப்படுகின்றனா். கோடை காலங்களில் வனப்பகுதி சாலையில் வனத்துறையினா் தண்ணீா் தொட்டி அமைத்து தண்ணீா் ஊற்றி வருவது வழக்கம். இந்த நிலையில் அந்த பணி தற்போது தொடங்கவில்லை.

Story image

மேலும் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் தண்ணீா் தேடி வரும் குரங்குகள் தொட்டியை பாா்த்து நீா் இன்றி ஏமாற்றத்துடன் திரிகின்றன.

எனவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் இந்த சூழலில் வனப்பகுதிகளுக்குள் தண்ணீா் தொட்டியில் நீா் நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.