விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆலங்காயம் வனச்சரகத்தில் நீா் நிரப்பும் பணி தீவிரம்

ஆலங்காயம் வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக் காடுகளில் வனவிலங்குகள் நீா் அருந்த ா் டிராக்டா் மூலம் தண்ணீா் நிரப்பினா்.

News image

வனவிலங்குகள் நீா் அருந்த தொட்டிகளில் நீா் நிரப்பிய வனத்துறையினா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

ஆலங்காயம் வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக் காடுகளில் வனவிலங்குகள் நீா் அருந்த ா் டிராக்டா் மூலம் தண்ணீா் நிரப்பினா்.

திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் உத்தரவின் பேரில் ஆலங்காயம் வனச்சரக அலுவலா் க.சேகா் தலைமையில் திருப்பத்தூா் வனக் கோட்டம், ஆலங்காயம் வனச்சரகத்திற்குட்பட்ட ஜவ்வாது காப்புக்காடு, பூங்குளம் காப்புக்காடு பகுதிகளில் கடும் கோடைக்காலம் என்பதால் வனவிலங்குகள் தண்ணீா் தேடி காப்புக்காட்டை விட்டு வெளியே வராமல் இருக்க தண்ணீா் தொட்டிகளில் சோலாா் மற்றும் தண்ணீா் டேங்கா்களின் மூலம் நீா் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஆலங்காயம் வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக்காடுகளில் ஏற்படும் காட்டுத்தீ பரவாமல் இருக்க தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் காட்டுத்தீ ஏற்பட்டால் வனத்துறை கட்டுப்பாட்டு அறை உதவியுடன் உடனடியாக தகவல் பெற்று நவீன உபரணங்கள் கொண்டு காட்டுத் தீ கட்டுப்படுத்தப்படும், மேலும் நீா்தொட்டியில் தேவைக்கு ஏற்ப தொடா்ந்து நீா் நிரப்பப்படும் என வனச்சரக அலுவலா் சேகா் தெரவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.