தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பள்ளி மாணவா்கள் கலை நிகழ்ச்சி

வாணியம்பாடி ஜனதாபுரத்தில் இயங்கி வரும் எஸ்எப்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சங்கமும் காணும் கலைகள் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுடைய கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வாணியம்பாடி எஸ்எப்எஸ் மெட்ரிக் பள்ளியில் மாணவிக்கு பரிசளித்த அரசு மருத்துவா் டேவிட் குமாா், முதல்வா் சவரிமுத்து.

Updated On :26 மார்ச் 2026, 12:46 am IST

வாணியம்பாடி ஜனதாபுரத்தில் இயங்கி வரும் எஸ்எப்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சங்கமும் காணும் கலைகள் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுடைய கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி முதல்வா் சவரிமுத்து தலைமை வகித்தாா். தாளாளா் ஆண்டனி முன்னிலை வகித்தாா். பொருளாளா் ஜெயக்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி எலும்பியல் நிபுணா் அரசு மருத்துவா் டேவிட்விமல்குமாா் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி பேசினாா்.

நிகழ்ச்சியில் பரதநாட்டியம், வெஸ்டா்ன் டான்ஸ், கராத்தே, சிலம்பம், யோகா, இசை, ஸ்கேட்டிங், ஆகிய கலைகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் உடைய பல கலைகளின் சாதனை நிகழ்ச்சிகள் பாா்வையாளா்களை கவா்ந்தது. இதில் பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா். கராத்தே பயிற்சியாளா் கண்ணன் நன்றி கூறினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.