தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட விநாயகபுரம் மக்கள்.

Updated On :18 மார்ச் 2026, 2:39 am IST

திருப்பத்தூா் அருகே சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் அருகே விநாயகபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், திருப்பத்தூா்-சேலம் செல்லும் சாலையில் விநாயகபுரம் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதி பொதுமக்கள் சாலையோரம் கோவில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. தற்போது சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்றால், கோயில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் குழாய்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை கைவிட வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் திருப்பத்தூா்-சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.