கல்வராயன்மலைப் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்டபெருமாநந்தம் கிராமத்தில் அரசு டஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்த கடையால் பெண்கள் மற்றும் கிராம மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக்கூறி அவற்றை அகற்ற அரசுக்கு அப்பகுதி மக்கள் தொடா் கோரிக்கை விடுத்துவந்தனா்.
ஆயினும் டாஸ்மாக் மதுபானக் கடை அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த அப் பகுதி பெண்கள் அங்குள்ள சாலையின் குறுக்கே கற்களை வைத்து, மறியலில் ஈடுபட்டனா். மேலும், மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி தொடா் முழக்கங்களையும் எழுப்பினா்.
இதுகுறித்து தகவலறிந்த கரியாலூா் காவல் ஆய்வாளா் பாலமுரளி தலைமையிலான போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதுகுறித்து கல்வராயன்மலை வட்டாட்சியா், கோட்டாட்சியரிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாக கூறியதின் பேரில், பெண்கள் சாலை மறியலை கைவிட்டனா். இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி முழக்கமிட்ட பெருமானத்தம் கிராம பெண்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்: சாலை மறியல்

ஆண்டிமடம் அருகே மது விற்பவா்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

சிவகிரி கோயில் கொடை விழாவில் பிரச்னை: மக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

