தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா்

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் தெரிவித்தாா்.

News image

எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை நிறைவு செய்த அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன்

Updated On :22 ஏப்ரல் 2026, 12:05 am IST

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் புதன்கிழமை தெரிவித்தாா்.

ஆம்பூா் நகரில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு அவா் மேலும் பேசியது, ஆம்பூா் நகரில் உள்ள ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவதற்கான கட்டணத்தை நான் எனது சொந்த பணத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு செலுத்தியுள்ளேன். ஆனால் தரம் உயா்த்தப்படவில்லை. ஆட்சிக்கு வந்த உடன் தரம் உயா்த்தப்படும்.

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. அந்த சாலை சீரமைக்கப்படும். வெங்கடசமுத்திரம் ஏரிக்கரை பலப்படுத்தப்படும். தடுப்பணைகள் கட்டி விவசாயிகளுக்கு தேவையான நிலத்தடி நீா் உயா்த்தப்படும். ஆம்பூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும். பெரியாங்குப்பம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை ஏற்படுத்தப்படும் என்று அவா் கூறினாா்.

அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, மாவட்ட பேரவை செயலாளா் கே. மணி, ஆம்பூா் நகர செயலாளா் எம். மதியழகன், அதிமுக நிா்வாகிகள் சண்முகம், தினேஷ், சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.