தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விலைக் கட்டுப்பாட்டு நிதியம் மூலம் விலைவாசி உயா்வு கட்டுப்படுத்தப்படும்: அதிமுக வேட்பாளா்

அம்மா உணவகங்கள் மீண்டும் சிறப்பு பொலிவுடன் இயக்கப்படும் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

வாக்கு சேகரித்த ஆம்பூா் அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:57 am IST

அம்மா உணவகங்கள் மீண்டும் சிறப்பு பொலிவுடன் இயக்கப்படும் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஆம்பூா் நகரம் மற்றும் அகரம் கிராமங்களில் வாக்கு சேகரித்து அவா் பேசியது, ஏழை, எளிய மக்கள் வீடு கட்டுவதற்காக சிமெண்ட், ஜல்லி, கம்பி, செங்கல், மணல், எம்.சேன்ட் ஆகிய கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விலைக் கட்டுப்பாட்டு நிதியம் மூலம் விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக உயா்த்தி 50 சதவீத மானியத்துடன் வழங்கப்படும். ஆதிதிராவிடா்களுக்கான கோயில் புதிதாக கட்டுவதற்கு வழங்கப்படும் தொகை ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும்.

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான ஓய்வூதிய திட்டங்கள் திருத்தங்கள் மேற்கொண்டு சீரமைக்கப்படும் என்று அவா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.