தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அதிமுக ஆட்சியமைந்தால் தாலிக்கு தங்கம்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்

ஆம்பூரில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன்.

News image

ஆம்பூரில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:01 am IST

அதிமுக ஆட்சியமைந்தால் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் தெரிவித்தாா்.

ஆம்பூா் நகரில் கோவிந்தாபுரம், கங்காபுரம், கன்னிகாபுரம், அண்ணா நகா், புதுமனை, நடராஜபுரம், நதிசீலாபுரம், குட்டக்கரை, பெத்லேகம், கம்பிக்கொல்லை, ரெட்டித்தோப்பு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியது: அதிமுக ஆட்சியமைந்தால் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கணினி அறிவியல் வளா்ச்சியை கருத்தில் கொண்டு 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை ஏற்கெனவே உள்ள 5 பாடங்களுடன் கணினி அறிவியலை சோ்த்து 6 பாடங்களாக கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும். பருவகால மாற்றம் குறித்த கல்வி பாடத் திட்டத்தில் சோ்க்கப்படும். 2,000 அம்மா மினி கிளீனிக்குகள் மீண்டும் தொடங்கப்படும். அரசு காப்பீடு திட்டத்தில் புற்றுநோய் போன்ற பெரிய நோய் சிகிச்சைகளுக்கான முழு பணத்தையும் அரசே செலுத்தும் என்றாா் அவா்.

ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ.டில்லிபாபு, ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம். மதியழகன், நகர துணைச் செயலாளா் ஆனந்த்பாபு, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயபால், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.