மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன்: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா்

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன் என ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி உறுதி தெரிவித்தாா்.

News image

ஜோலாா்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:10 am IST

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன் என ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி உறுதி தெரிவித்தாா்.

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா் கவிதா தண்டபாணி ஞாயிற்றுக்கிழமை ஜோலாா்பேட்டை மத்திய ஒன்றியத்துக்குள்பட்ட பாச்சல், புளியாங்குட்டை, ஜெய்பீம் நகா், வள்ளுவா் நகா், காந்திபுரம், அதன் சுற்றுப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: கடந்த 5 ஆண்டுகளில் நம்முடைய பகுதிக்கு திராவிட மாடல் ஆட்சியில் சாலைகள், பள்ளிக் கட்டடங்கள் உள்பட பல வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும், எனக்கு வாக்களித்து தோ்ந்தெடுத்ததால் நமது தொகுதி முழு வளா்ச்சிக்கும் பாடுபடுவேன். ஏலகிரி மலையை சிறந்த சுற்றுலாத்தளமாக்க நடவடிக்கை எடுப்பேன்.

மேலும், அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீா், சாலை வசதிகள் மேம்படுத்துவேன் என்றாா். அப்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் பலா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.