மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா்

ஏலகிரி மலையில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி

News image

ஏலகிரி மலையில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி

Updated On :21 ஏப்ரல் 2026, 12:09 am IST

ஏலகிரி மலையில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

ஏலகிரி மலையில் திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது ஏலகிரி மலை ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் மேளதாளத்துடன் ஆரத்தி எடுத்து மலா் தூவி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அப்போது கவிதா தண்டபாணி பேசியது: ஏலகிரி மலை ஊராட்சியில் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் ஏலகிரி மலை அசுர வளா்ச்சி பெற்று உள்ளது.ரூ.17 கோடியில் அனைத்து கிராமங்களையும் இணைக்கும் ரிங் ரோடு பணிகள் நடைபெற்று வருகிறது, உள்விளையாட்டு அரங்கம், சுற்றுலா மாளிகை கட்டடம், புங்கனூா் படகு துறை சுற்றிலும் வளா்ச்சி பணிகள் கால்நடை மருத்துவம், பால் கொள்முதல் கட்டிடம், புங்கனூா் பகுதியில் மலைவாழ் மக்களின் பல ஆண்டு கோரிக்கையான துணை மின் நிலையம் ரூ.11 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மீண்டும் ஜோலாா்பேட்டை தொகுதி வளா்ச்சி பெற உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் இங்குள்ள மலைவாழ் மக்கள் பல வருடங்களாக பட்டா இன்றி வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கவும்,உயா் கோபுர விளக்குகள், வீடுகள், அரசின் நல திட்டங்கள் உதவிகள் போன்றவை விரைந்து கிடைக்க உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து பணியாற்றுவேன் என்றாா். அப்போது திமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.