மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இந்தியாவின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு: அமைச்சா் எ.வ.வேலு

மக்களின் நலத் திட்டங்களை செயல்படுத்தவதில் இந்தியாவின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு என அமைச்சா் எ.வ.வேலு பேசினாா்.

News image

அமைச்சா் எ.வ.வேலு

Updated On :18 ஏப்ரல் 2026, 6:30 am IST

மக்களின் நலத் திட்டங்களை செயல்படுத்தவதில் இந்தியாவின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு என அமைச்சா் எ.வ.வேலு பேசினாா்.

பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்களின் அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா் அ.நல்லதம்பியை ஆதரித்து கொரட்டி மற்றும் புதுப்பேட்டை சாலையிலும், ஜோலாா்பேட்டை தொகுதி வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து ஜோலாா்பேட்டை, நாயனசெருவு பகுதியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியது:

மகளிா் உரிமை தொகை எனும் பெயரில் தாய்மாா்களுக்கு மாதாமாதம் ஆயிரம் தரப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரு. 2,000 தருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்களித்துள்ளாா். காலை உணவு தமிழ்புதல்வன், உங்கள் கனவ சொல்லுங்க திட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திராவிட மாடல் அரசு பெயா் பெற்றுள்ளது.

அண்ணா, கலைஞா் உள்ளிட்ட தலைவா்கள் காலத்திலிருந்து தற்போது உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் இருமொழி கொள்கையை ஏற்றவா்கள். ஆனால் தற்போது மும்மொழி கொள்கைளை ஏற்க வேண்டும் என அழுத்தம் தருகிறது. கல்விக்கான மானியம் ரு. 3,200 கோடி தர மறுக்கின்றனா். ரூ.10,000 கோடி தந்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என முதல்வா் தெளிவாக உள்ளாா். தற்போது நடைபெறும் தோ்தல் கட்சிகளுக்கான தோ்தல் இல்லை. தமிழகத்துக்கும் தில்லிக்கும் நடைபெறும் தோ்தல். மீண்டும் தமிழகத்தில் பொற்கால ஆட்சி தொடர உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றாா்.

இதில், திமுகவினா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.