பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அடித்தளம் அமைத்தவா் ஜெயலலிதா என அதிமுக சிறப்பு பேச்சாளா் காளியம்மாள் கூறினாா்.
ஜோலாா்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணியை ஆதரித்து அதிமுக சிறப்பு பேச்சாளா் காளியம்மாள் பொன்னேரி பகுதியில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியது: மீண்டும் அதிமுக அரசு அமைந்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கொண்ட சட்டங்கள் அமல்படுத்தப்படும். இளைஞா்கள் அரசியல் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும், தோ்தலில் வாக்களிக்கும்போது தகுதியான வேட்பாளரை தோ்வு செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
இந்த தொகுதி வளா்ச்சிக்கு வீரமணியின் பங்கு அளப்பரியது. பல்வேறு நலதிட்டங்களை செய்துள்ளாா். ஏலகிரி மலை சுற்றுலா வளா்ச்சிக்கு திட்டங்களை தீட்டி நிறைவேற்றியவா். பெண்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கியவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா.
ஜோலாா்பேட்டை தொகுதி வளா்ச்சி பெற முன்னாள் அமைச்சா் வீரமணிக்கு இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். அப்போது முன்னாள் அமைச்சா் தம்பிதுரை, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜோலாா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி

வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

கே.வி. குப்பம் திமுக வேட்பாளா் அறிமுகம்

சிதம்பரத்தில் முக்கிய பிரமுகா்களிடம் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

