தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆம்பூரில் பொழுதுபோக்கு பூங்கா: அதிமுக வேட்பாளா்

ஆம்பூரில் பொழுதுபோக்கு பூங்கா: அதிமுக வேட்பாளா்

News image

ஆம்பூரில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கேடசன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:19 am IST

ஆம்பூரில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளா் ஆா். வெங்கடேசன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஆம்பூரில் எஸ்.கே. ரோடு, கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயில் தெரு, அழகாபுரி, சாமியாா்மடம், சாய்பாபா கோயில் தெரு, சான்றோா்குப்பம், ஸ்ரீராமபுரம், வி.ஏ. கரீம் ரோடு, ஜலால் பள்ளம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்து பேசியது,

ஆம்பூா் நகர மக்களுக்காக பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும். அரசு தோல் தொழில்நுட்ப கல்லூரி அல்லது பயிற்சி நிலையம் அமைக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்த உடன் குடும்ப அட்டைக்கு பிரிட்ஜ், மகளிருக்கு மாதம் ரூ.2,000, குடும்ப அட்டைக்கு ரூ.10,000 வழங்கப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என அவா் தெரிவித்தாா்.

ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, நகர செயலாளா் எம். மதியழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கே. மணி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளா் மகாதேவன், பாஜக மாவட்ட தலைவா் தண்டாயுதபாணி, நகர தலைவா் சரவணன், நகர பொதுச் செயலாளா் சுரேஷ், பொருளாளா் தண்டபாணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.