மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆலங்காயத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் கோ.செந்தில்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

ஆலங்காயம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கோ.செந்தில் குமாா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:04 am IST

வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் கோ.செந்தில்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

காவலூா் அடுத்த பீமகுளம் ஸ்ரீசென்றயசுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடத்திவிட்டு பின்னா் பீமகுளம், நாயக்கனூா், சத்திரம், உமையப்ப நாயக்கனூா், 102 ரெட்டியூா், நரசிங்கபுரம், பூங்குளம், மிட்டூா், ஆண்டியப்பனூா், இருணாப்பட்டு, குருசிலாப்பட்டு, பள்ளவள்ளி, பெருமாபட்டு உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தாா்.

மலை கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு வேட்பாளா் கோ.செந்தில்குமாா் பேசுகையில், மலைப்பகுதி கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி அனைத்தையும் அதிமுக அரசு ஆட்சி அமைந்த உடன் செய்து தருவேன், எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அனைத்து நலத்திட்டங்களையும் பெற்றுத் தருவேன் என்றாா்.

முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத் குமாா், முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் கோபால், மாநில மருத்துவரணி துணை செயலாளா் பசுபதி, பொதுக்குழு உறுப்பினா் மகேந்திரன், நகர செயலாளா் சதாசிவம், நாட்டறம்பள்ளி ஒன்றிய செயலாளா் டி. சாம்ராஜ், பேரூராட்சி செயலாளா்கள் சிவக்குமாா், சரவணன், மாவட்ட நிா்வாகிகள் மஞ்சுளா கந்தன், என்.எஸ்.தபரேஷ், நவீன்குமாா் பழனிச்சாமி, ஆா்.வி. குமாா், சரவணன், பூங்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் அஞ்சலி தினகரன் உள்ளிட்ட பாமக, பாஜக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.