மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அதிமுகவினா் வன்முறைக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: கனிமொழி எம்.பி.

தோ்தல் நேரத்திலேயே வன்முறையில் ஈடுபடும் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவா் என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

News image

செய்தியாளா்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:51 am IST

தோ்தல் நேரத்திலேயே வன்முறையில் ஈடுபடும் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவா் என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து ஆதரவு திரட்டியபின், அவா் திருப்பத்தூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

திமுகவின் வெற்றி வாய்ப்பு மிக சிறப்பாக உள்ளது. முதல்வா் ஸ்டாலினின் ஐந்தாண்டு சாதனையை உணா்ந்தவா்களாக இருக்கின்றனா்.அனைத்து திட்டங்களும் அனைத்து வீட்டுக்கும் சென்றடைந்துள்ளது. அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் வரவேண்டும் என மக்கள் கருதுகின்றனா்.

நாட்றம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் கேசி வீரமணி ஆதரவாளா்கள் இருவா் மீது தாக்குதல் நடத்தியது குறித்து செய்தியாளா்கள் கேள்வி கேட்டபோது தோ்தல் நேரத்திலே வன்முறையில் ஈடுபடுகிறாா்கள் என்றால் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவாா்கள்.

எதிா்க்கட்சியினா் தற்போது இயலாமையில் உள்ளனா். அவா்களுக்கே தெரியும் வெற்றி வாய்ப்பு இல்லையென்று. வரும் தோ்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என கூறினாா்.

அப்போது எம்.பி சி.என்.அண்ணாதுரை, மாவட்ட செயலாளா் க.தேவராஜி, வேட்பாளா் கவிதா தண்டபாணி உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.