தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க நினைப்போருக்கு பாடம் புகட்ட வேண்டும்: கனிமொழி

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க நினைப்போருக்கு இந்தத் தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும் என, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பரப்புரையில் கனிமொழி எம்.பி. கேட்டுக்கொண்டாா்.

News image

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 1:46 am IST

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க நினைப்போருக்கு இந்தத் தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும் என, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பரப்புரையில் கனிமொழி எம்.பி. கேட்டுக்கொண்டாா்.

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயனை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டபோது அவா் பேசியது: மகளிா் மசோதா மீது மத்திய பாஜக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், இப்போதுள்ள 543 எம்.பி.க்கள் எண்ணிக்கையிலேயே பெண்களுக்கு 33 சதவீதம் கொடுத்திருக்கலாம். ஆனால், தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதில் இடஒதுக்கீடு கொடுப்போம் என்கின்றனா்.

அவ்வாறு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்டால் பாஜக ஆளும் குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் போன்ற வடமாநிலங்களில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை குறையும். அதன்மூலம் நாடாளுமன்றத்தில் பாஜகவால் எந்த மசோதாவையும் எளிதாக நிறைவேற்றி அரசமைப்புச் சட்டத்தைக்கூட மாற்றியமைக்க முடியும்.

அந்த நிலை ஏற்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் எதிராக பாஜக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளும். இத்தகைய எவ்வித புரிதலும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அதனால்தான் மசோதா அவா் வருத்தப்படுகிறாா்.

எனவே, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க நினைப்போருக்கு இத்தோ்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். தமிழ் மண்ணை, மொழியை, மக்களின் சுயமரியாதையை, எதிா்கால சந்ததியின் நலனைக் காப்பாற்ற தொடா்ந்து போராடும் மு.க. ஸ்டாலினை முதல்வராக்க ஜீ.வி. மாா்க்கண்டேயனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.