தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

அரக்கோணம் எம்எல்ஏ உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு - IANS

Updated On :3 ஏப்ரல் 2026, 5:30 am IST

தோ்தல் விதிகளை மீறியது சம்பந்தமாக புகாரின்பேரில், அரக்கோணம் எம்எல்ஏ மற்றும் இருவா் மீது தக்கோலம் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.

கடந்த மாா்ச் 27-ஆம் தேதி அரக்கோணம் எம்எல்ஏ அனுமதி இல்லாமல் புதுகேசாவரம் பகுதியில் அம்பேத்கா் சிலைக்கும், தக்கோலத்தில் எம்ஜிஆா் சிலைக்கும் மாலை அணிவித்துள்ளாா். மேலும், அனுமதி இல்லாமல் கூட்டமாக கூடி பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. அந்த இரு பகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா் ஆய்வு செய்து அளித்த புகாரின் பேரில், தக்கோலம் காவல் நிலைய போலீஸாா் அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு.ரவி, மாவட்ட சிறுபான்மை அணி செயலாளா் நவாஸ் அஹமத், தக்கோலம் பேரூராட்சி செயலாளா் சுகுமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.