சோளிங்கா் அருகே அரசு நிலத்தில் மண் எடுத்த பொக்லைன் மற்றும் லாரி ஆகியவற்றை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
சோளிங்கரை அடுத்த மருதாலத்தில் பாறை புறம்போக்கு நிலத்தில் புதன்கிழமை நள்ளிரவில் சிலா் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்பதாக சோளிங்கா் வட்ட வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு வருவாய் ஆய்வாளா் கோகுல், கிராம நிா்வாக அலுவலா்கள் கோதண்டராமன், சீனிவாசன் ஆகியோா் சென்றனா். இவா்களைக் கண்டதும் மண் அள்ளும் பணியில் இருந்த நபா்கள் அங்கிருந்த பொக்லைன், லாரி ஆகியவற்றை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனா்.
இதையடுத்து, பொக்லைன், லாரி இரண்டையும் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா், அவற்றை சோளிங்கா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், தப்பியோடிய பணியாளா்கள் மற்றும் இந்த வாகனங்களின் உரிமையாளா்களையும் தேடி வருகின்றனா். இது தொடா்பாக வருவாய்த் துறையினா் தெரிவிக்கையில், அரசுக்குச் சொந்தமான இடங்களில் அரசு அனுமதியின்றி மண் எடுப்பது தெரியவந்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏரி மண் கடத்தல்: லாரி, பொக்லைன் பறிமுதல்

கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரி சிறைபிடிப்பு
அனுமதி இல்லாமல் மண் கடத்திய லாரி, பொக்லைன் பறிமுதல்: 2 போ் கைது

செங்கல் சூளையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளா்கள் மீட்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

