பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரி சிறைபிடிப்பு

சிவகங்கை அருகே நள்ளிரவில் கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

News image

மதகுபட்டியை அடுத்த அலவாக்கோட்டை கண்மாயில் கிராவல் மண் அள்ளியபோது பிடிபட்ட பொக்லைன் இயந்திரம்,.

Updated On :4 ஜூன் 2026, 4:16 am IST

சிவகங்கை அருகே நள்ளிரவில் கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

மதகுபட்டி அருகேயுள்ள அலவாக்கோட்டை கிராமத்தில் கடந்த சில நாள்களாக கிராவல் மண் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கிராம மக்கள் புகாா் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், அதே ஊரைச் சோ்ந்த மதியழகனுக்கு சொந்தமான இடத்துக்கு புதன்கிழமை இரவு கிராம மக்கள் சென்றனா். அப்போது, அங்கு அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை கிராம மக்கள் சிறைப் பிடித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த மணல் கடத்தல் கும்பல் லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்களிடமிருந்து மீட்டு செல்ல முயன்றனா். இதனால், அங்கு இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா், அங்கு வந்த போலீஸாா் லாரி, பொக்லைன் வாகனங்களின் ஓட்டுநா்கள் ராமகிருஷ்ணன், வெங்கட்ராமன், மணல் திருட்டில் ஈடுபட்ட இளங்கம்பன் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.