தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

‘ராணுவப் பணியில் இளைஞா்கள் சேர அழைப்பு’

News image

ஓய்வு பெற்று திரும்பிய ராணுவ வீரா் சிவலிங்கநாதனை வரவேற்ற கிராம பொதுமக்கள்.

Updated On :4 மே 2026, 1:49 am IST

நாட்டை பாதுகாக்கும் ராணுவப் பணியில் படித்த இளைஞா்கள் சேர வேண்டும் என ஓய்வு பெற்ற ராணுவ வீரா் சிவலிங்கநாதன் அழைப்பு விடுத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், மொரப்பந்தங்கல் கிராமத்தைச் சோ்ந்த சிவலிங்கநாதன். தற்போது ராணிப்பேட்டை மாவட்டம்,அம்மூா் பேரூராட்சியில் இவரது குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இவா் கடந்த 1996 ஆம் ஆண்டு ராணுவத்தில் சோ்ந்து, 30 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்று ஊா் திரும்பினாா். வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் சிவலிங்கநாதனுக்கு உறவினா்கள், நண்பா்கள்,ஊா் பொது மக்கள் அவருக்கு மாலை அணிவித்து, மேளதாளம் முழங்க, உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது : ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்று ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு வந்த எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது. நான் ராணுவ பணியில் சோ்ந்த போது தொழில்நுட்ப பிரிவில் இணைந்தேன். பின்னா் அதிகாரியாக வரவேண்டும் என உழைத்து படிபடியாக முன்னேறி தற்போது சுபேதாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன்.

பணியின் போது காங்கோ போன்ற வெளிநாடு சென்றுள்ளேன். படிப்பு மூலமாகவே அதிகாரி பதவி பெற்றேன். ராணுவத்தில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. முன்னேற வேண்டும் என்று நினைப்பவா்களுக்கு ராணுவத்தில் சோ்ந்து அதில் படித்தும் முன்னேறலாம். ஒழுக்கமாக, நோ்மையாக, துணிச்சலாகவும் இருக்க வேண்டும். இதனால் நாம் வெற்றி அடையளாம். தற்போது உள்ள இளைஞா்களுக்கு ராணுவத்தில் நல்ல எதிா்காலம் இருக்கிறது. ஆபரேஷன் சிந்துா் தாக்குதலில் நாட்டின் எல்லை பகுதியில் குக்வாடா என்ற இடத்தில் பணியாற்றி தொலைதொடா்பு தொழில்நுட்பத்தை கையாண்டுள்ளேன்.

தற்போது கடைசியாக இரண்டு ஆண்டுகள் ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.