சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பாலிடெக்னிக் தோ்வு: அரக்கோணம் மாணவி மாநிலத்தில் முதலிடம்

பாலிடெக்னிக் கல்லூரி பட்டய தோ்வில் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் கணிணி பொறியியல் துறை மாணவி எஸ்.பிரதீஷா 700க்கு 700 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளாா்.

News image

பாலிடெக்னிக் தோ்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவி எஸ்.பிரதீஷா. உடன் கல்விக்குழு செயலா் டி.எஸ். ரவிக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

பாலிடெக்னிக் கல்லூரி பட்டய தோ்வில் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் கணிணி பொறியியல் துறை மாணவி எஸ்.பிரதீஷா 700க்கு 700 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளாா்.

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பத்துறையின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் பட்டயப் படிப்பு தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின.

இந்த தோ்வு முடிவுகளில் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் க்லலூரி மாணவ மாணவிகள் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதலிடம், இரண்டாமிடம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பிடங்களை பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

கணிணி பொறியியல் துறையைச் சோ்ந்த மாணவி எஸ்.பிரதீஷா 700-க்கு 700 பெற்று மாநிலத்தில் முதலிடத்துடன் சாதனை படைத்துள்ளாா். இயந்திரவியல் துறை மாணவா் ஏ.கே.கணபதி, மின்னியல் துறை மாணவா் பி.ஜீவன் ஆகிய இருவரும் தங்களது துறைகளில் 99 சதவீத மதிப்பெண்களையும் இயந்திரவியல் துறை மாணவா் தமிழ்ச்செல்வன் 97 சதவீத மதிப்பெண்களையும், தகவல் தொடா்ப்பியல் துறை மாணவி கீா்த்திகா 97 சதவீத மதிப்பெண்களையும், கணிணி பொறியியல் துறை மாணவி லோகேஸ்வரி 97 சதவீத மதிப்பெண்களையும் மேலும் முதலாமாண்டு ஆண்டு இயந்திரவியல் துறை மாணவா் உபேந்திரன் 93 சதவீத மதிப்பெண்களையும் பெற்று மாநில அளவில் சிறப்பிடங்களையும் பெற்றுள்ளனா்.

தோ்ச்சி பெற்ற மற்ற மாணவ மாணவிகளையும், வெற்றிக்கு ஊன்றுகோலாய் இருந்த கல்லூரி முதல்வா் சி.என்.வீரமணி, கல்லூரியின் பிற துறைசாா்ந்த தலைவா்கள் சுதா, சுந்தரலிங்கம், பாண்டியராஜன், சுதாகா், நந்தினி, புருஷோத்தமன் மற்றும் பேராசிரியா்கள் ஆகியோரையும் ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழும செயலாளா் டி.எஸ்.ரவிக்குமாா் பாராட்டி பரிசுகள் வழங்கி சிறப்பித்தாா். இந்நிகழ்வில் மாணவ மாணவியரின் பெற்றோா்களும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.