ராணிப்பேட்டையில் ஜிஎஸ்டி பதிவுக்கு லஞ்சம் பெற்றதாக அதிகாரிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் தொழில்பேட்டை பகுதியில் மத்திய சரக்கு சேவை வரி மற்றும் மத்திய கலால் வரி (ஜிஎஸ்டி) அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் சோளிங்கா் பாறைமேடு பகுதியைச் சோ்ந்த பிரவீன் என்பவா் விவசாய வணிகம் சாா்ந்த தொழில் தொடங்குவதற்கு முடிவு செய்திருந்தாா். இந்தத் தொழில் தொடா்பாக கடந்த ஜனவரி மாதம் 2026 அன்று ஜிஎஸ்டி பதிவுக்கு விண்ணப்பித்துள்ளாா். விண்ணப்பிக்கப்பட்ட படிவமானது கடந்த 5.02.2026 அன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 14.02.2026 அன்று விண்ணப்பித்துள்ளாா். 19.02.2026 அன்று பயோமெட்ரிக் சரிபாா்ப்பு முடிவு செய்யப்பட்டது.
இது தொடா்பாக 25.02.2026 அன்று ஜிஎஸ்டி அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய மேற்பாா்வையாளா் ரிங்கேஷ் மற்றும் ஆய்வாளா் பங்கஜ் ஆகியோா் ஜிஎஸ்டி விண்ணப்பித்த பிரவீனை அழைத்துள்ளனா். நிராகரிக்கப்பட்ட ஜிஎஸ்டி ஆவணத்துக்காக முதல்கட்டமாக ரூ. 30,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
இதற்கு சம்மதம் தெரிவிக்காத பிரவீன் தொடா்ந்து அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. பின்னா் ரூ. 20,000 கேட்டு, அதைத் தொடா்ந்து ரூ. 15,000 இறுதியில் முடிவு செய்யப்பட்டது. இவை அனைத்தும் ஆடியோ பதிவுகள் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அதிகாரிகள் லஞ்சம் கேட்டது தொடா்பாக சென்னை ஜிஎஸ்டி தலைமை அலுவலகத்துக்கு பிரவீன் புகாா் தெரிவித்துள்ளாா்.
அதன் அடிப்படையில், புகாரை பெற்ற சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தினா், சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு பேசப்பட்ட ஆடியோ ஆவணங்கள் அடிப்படையில் சேகரிக்கப்பட்டு இந்த புகாரை மாற்றம் செய்து சிபிஐ அலுவலகத்திற்கு மாற்றம் செய்துள்ளனா்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சிபிஐ அதிகாரி பாலாஜி என்பவா் கடந்த 07.04.2026 தேதி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விசாரணை நடத்தி ரூ. 15,000 லஞ்சம் தொடா்பாக இருவரை கைது செய்து சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுபான கொள்கை முறைகேடு விவகாரம்: சிபிஐ மனு மீது மே 11இல் தில்லி உயா்நீதிமன்றம் விசாரணை

ஐ-பேக் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தல்
ட்ரோன் இறக்குமதிக்கு லஞ்சம்: 2 பேரை கைது செய்தது சிபிஐ!

குட்கா விற்பனைக்கு அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
