தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குட்கா விற்பனைக்கு அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 6:25 am IST

குட்கா விற்பனைக்கு அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ள வாக்குமூலம் அளிக்காத சாட்சிகளை நீக்கக் கோரி முன்னாள் காவல் ஆணையா் தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய அதிகாரிகள் மற்றும் அமைச்சா்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக மாதவராவ், சீனிவாசராவ் உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இது குறித்து சிபிஐ நடத்திய விசாரணையில் முன்னாள் அமைச்சா்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கா், முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை காவல் ஆணையா் எஸ்.ஜாா்ஜ் உள்பட பலரை வழக்கில் சோ்த்தனா். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குற்றப்பத்திரிகையில் உள்ள சில சாட்சிகளை நீக்கக் கோரி முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், புலன் விசாரணை நடத்திய அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்காத சாட்சிகள் பலா் இந்த வழக்கில் உள்ளனா். அவா்கள் தேவையில்லாத சாட்சிகள். எனவே, அவா்களை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் கே.சீனிவாசன், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.