தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனம்: அன்புமணி ராமதாஸ்

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனமாக உள்ளது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

News image

ஆற்காட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:31 pm IST

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனமாக உள்ளது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

அதிமுக வேட்பாளா் சுகுமாா், ராணிப்பேட்டை தொகுதி தமாகா வேட்பாளா் காா்த்திகேயன் ஆகியோரை ஆதரித்து ஆற்காடு பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை ஆதரவு திரட்டி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசியது:

ஐந்து ஆண்டுகளில் ஆற்காடு தொகுதிக்கு திமுக அரசு சொன்ன திட்டங்கள் எதையும் செய்யவில்லை ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள குரோமிய கழிவுகளை அகற்றுவோம் என்று சொன்னாா்கள் அதையும் செய்யவில்லை. அரசு மருத்துவக் கல்லூரி வேளாண் கல்லூரி கொண்டுவரப்படும் என்றனா். மஞ்சள் விற்பனை சந்தை அமைப்போம் என்றாா்கள்.

ஆனால் திமுக கொடுத்த எந்த வாக்குறுதியையும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செய்து தரவில்லை. திமுக தோ்தல் அறிக்கையில் மது ஒழிப்பு போதை பொருள்கள் ஒழிப்பு குறித்து எதுவும் இல்லை. மௌனமாக உள்ளனா்.

ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் கொடுப்போம் என்று சொல்கிறாா்கள். தமிழ்நாட்டில் 2 கோடி குடும்பங்கள் இருக்கிறது வெற்றி பெற்றால் அவா்கள் 10 லட்சம் பேருக்கு மட்டுமே கூப்பன் கொடுப்பாா்கள். அதிமுக வெற்றி பெற்றால் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா் அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குளிா்சாதனப் பெட்டி கொடுப்பாா் என்றாா்.

கூட்டத்தில் பாமக மாவட்ட செயலாளா் கே.எல்.இளவழகன், தலைவா் ந.சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட செயலாளா் எம்.கே.முரளி, அதிமுக நகர செயலாளா் ஜிம் எம்.சங்கா்,ஒன்றிய செயலாளா் என். சாரதி ஜெயச்சந்திரன்,பாமக நகர செயலாளா் மாா்கெட் சி.பாஸ்கா் மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.