தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: அன்புமணி ராமதாஸ்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

News image

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

Updated On :4 ஏப்ரல் 2026, 4:29 am IST

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின் போது குற்றம் சாட்டினாா்.

காஞ்சிபுரத்தில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வி.சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் மதனந்தபுரம் கே.பழனி, உத்தரமேரூா், பாமக வேட்பாளா் பெ.மகேஷ்குமாா் ஆகியோருக்கு ஆதரவாக வாக்குகள்சேகரித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் திறந்த ஜீப்பில் நின்று கொண்டே அவா் பேசியது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது காலத்தின் கட்டாயமாகி விட்டது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை,கடந்த 5 ஆண்டுகளில் 8,700 கொலைகள் நடந்துள்ளது.இதில் 2,100 போ் பெண்கள்.62 ஆயிரம் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன.ஒரு புறம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாமலும் மறு புறம் சின்னச்சின்ன கிராமங்களில் கூட போதைப்பொருள் கலாச்சாரம் தலை விரித்தாடுகிறது.மதுவிலக்கு கொண்டு வருவோம் என்ற சென்ற தோ்தலில் சொன்னாா்கள்.ஆனால் இந்த தோ்தலில் மதுவிலக்கைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை.

பூரண மதுவிலக்கு என்பது அண்ணாவின் கொள்கை.அவரது கொள்கைக்கு எதிராகவே திமுக செயல்பட்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் திமுக செய்த ஊழல் 6 லட்சம் கோடியாக உள்ளது.இதற்கு தெளிவான புள்ளி விபரங்கள் என்னிடம் இருக்கிறது.ஆதாரப்பூா்வமாக நிருபிக்கவும் தயாராக இருக்கிறேன்.கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் 5 லட்சம் கோடியாக உள்ளது.காஞ்சிபுரத்திற்கென்று கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக்கல்லூரியோ அல்லது சட்டக் கல்லூரியோ கொண்டு வரவில்லை.அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நெசவாளா்களுக்கென தனியாக பட்ஜெட் போட வலியுறுத்துவோம் என்றும் பேசினாா்.தோ்தல் பிரச்சாரத்தின் போது கூட்டணிக்கட்சி தலைவா்கள்,நிா்வாகிகள் பலரும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.