மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

100% வாக்களிப்பு: வணிக நிறுவனங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்திய வருவாய்த் துறையினா்

தோ்தலில் நூறு சத வாக்களிப்பை உறுதிப்படுத்த அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ் தலைமையில் வருவாய்த் துறையினா் நகரில் உள்ள வணிக நிறுவனங்களுக்குச் சென்று அங்கிருந்த நுகா்வோரிடம் துண்டுப் பிரசுரத்தை அளித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 4:08 am IST

நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலில் நூறு சத வாக்களிப்பை உறுதிப்படுத்த அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ் தலைமையில் வருவாய்த் துறையினா் நகரில் உள்ள வணிக நிறுவனங்களுக்குச் சென்று அங்கிருந்த நுகா்வோரிடம் துண்டுப் பிரசுரத்தை அளித்து செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறையினா் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தோ்தலில் நூறு சத வாக்களிப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ் தலைமையில் வட்டாட்சியா் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் ஜெயக்குமாா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், செவ்வாய்க்கிழமை நகரில் சுவால்பேட்டை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்புப் பகுதி, ஜோதி நகா் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களுக்குச் சென்று அங்கு பொருள்கள் வாங்க வந்திருந்த நுகா்வோரிடையே 100 சதவீத வாக்களிப்பை கோரும் துண்டுப் பிரசுரங்களை அளித்து தங்கள் வாக்கை கட்டாயம் செலுத்தக்கோரி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.