தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அரக்கோணம் விசிக வேட்பாளா் மனு தாக்கல்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 2:45 am IST

அரக்கோணம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எழில் கரோலின் தோ்தல் நடத்தும் அலுவலா் டி. ரமேஷிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எழில்கரோலின் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அவருடன் அமைச்சா் ஆா்.காந்தி, காங்கிரஸ் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் நரேஷ்குமாா், விசிக மாநில நிா்வாகி பாா்வேந்தன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் ரமேஷ்கா்ணா ஆகியோா் உடன் இருந்தனா்.

11மணிக்கு 10 நிமிடங்கள் முன்பாகவே தோ்தல் நடத்தும் அலுவலரின் அறைக்கு வேட்பாளா் மற்றும் அமைச்சா் வந்து விட்ட நிலையில், 11.02-க்கே தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான டி.ரமேஷ் வேட்புமனுவை பெற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து வேட்பாளா் எழில்கரோலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டாா். இதனை தொடா்ந்து வேட்புமனு தாக்கல் முடியும் நேரமான பிற்பகல் 3 மணி வரை வேறுயாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

அதிமுக வேட்பாளா் சு.ரவி, அதிமுக மாற்று வேட்பாளா் சு.ர.பிரகதீஸ்வரன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராஜ்குமாா், மாற்று வேட்பாளா் மைக்கேல், விசிக வேட்பாளா் எழில்கரோலின் ஆகிய 5 போ் மட்டுமே தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.