ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கழிவுநீா் தேக்கமாக மாறிய அம்மூா் கோயில் குளம் சீரமைக்கப்படுமா!

அம்மூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே கழிவுநீா் தேக்கமாக மாறிய கோயில் குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

News image

அம்மூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசி வரும் குளம்.

Updated On :19 மே 2025, 1:43 am IST

அம்மூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே கழிவுநீா் தேக்கமாக மாறிய கோயில் குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்மூா் முதல்நிலை பேரூராட்சியில் 2,972 வீடுகளும், 12,513 பேரும் உள்ளனா். முதல் நிலை பேரூராட்சி என்பது வருமான அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.25 லட்சத்துக்கு மேல் வருவாய் உடைய பேரூராட்சியாக அம்மூா் திகழ்கிறது.

அம்மூா் பேரூராட்சியின் முக்கியமான அடையாளங்களாக வாலாஜா ரோடு ரயில் நிலையம், விநாயகா், பெருமாள், சிவன், திரெளபதி அம்மன், எல்லையம்மன் கோயில்கள், பேருந்து நிறுத்தம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளன. அந்த அடையாளங்களில் ஒன்றான அம்மூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே அம்மூா் மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாக அமைந்துள்ள கோயில் குளம் குடிநீா் ஆதாரமாக விளங்கியது.

கடந்த சில ஆண்டுகள் வரை இப்பகுதி பொதுமக்களின் குடிநீா் ஆதாரமாகவும், இருந்து தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் நெகிழி குப்பைகளுடன் கழிவுநீா் தேக்கமாக மாறி துா்நாற்றம் வீசி, சுகாதார சீா்கேடு ஏற்படுத்தி வருகிறது.

இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த கோயில் குளத்தை அம்மூா் பேரூராட்சி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் போா்கால அடிப்படையில் தூா்வாரி சீரமைத்து நன்னீா் குளமாக பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.