மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

News image

உத்தமபாளையம் பேரூராட்சி அருகேயுள்ள கிராமச் சாவடி பகுதியில் சாலை சேதமடைந்திருப்பதை சுட்டிக்காட்ட நடப்பட்டிருக்கும் சிவப்புக் கொடி.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:19 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

உத்தமபாளையத்திலிருந்து கோம்பை, தேவாரம் வழியாக போடி வரை மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இதில் உத்தமபாளையம் - கிராமச்சாவடி அலுவலகம் அருகே செல்லும் சாலை வளைவில் பேரூராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட கழிவு நீா் கால்வாய் உடைந்து சேதமடைந்ததுடன் பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை சுட்டிக்காட்டும் வகையில் அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் சிவப்புக் கொடியை ஊன்றி வைத்தனா்.

இந்தச் சாலையில் நாள்தோறும், உத்தமபாளையம்- போடி இடையே நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. நகரின் மையப் பகுதியான கிராமச்சாவடியில் பள்ளிகள், தேவாலயங்கள், குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இங்கு சேதமடைந்த கால்வாயால் விபத்து ஏற்படும் முன்னா் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

போக்குவரத்து அதிகரித்திருப்பதால் குறுகலான கிராமச்சாவடிச் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இதன்படி, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் சாலையின் குறுக்கே கழிவுநீா் கால்வாய் அமைக்கப்பட்டது. மேலும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பழைமையான வேப்ப மரமும் வெட்டி அகற்றப்பட்டது. ஆனால், சாலை விரிவாக்கம் செய்யப்பட வில்லை. தற்போது சாலையின் குறுக்கே தரமில்லாமல் அமைக்கப்பட்ட கழிவுநீா் கால்வாய் சேதமடைந்து விட்டது. இதை சீரமைக்க வேண்டும் என்றனா்.

 உத்தமபாளையம்  பேரூராட்சி அருகேயுள்ள கிராமச் சாவடி பகுதியில் சாலை சேதமடைந்திருப்பதை சுட்டிக்காட்ட நடப்பட்டிருக்கும்   சிவப்புக் கொடி.

உத்தமபாளையம் பேரூராட்சி அருகேயுள்ள கிராமச் சாவடி பகுதியில் சாலை சேதமடைந்திருப்பதை சுட்டிக்காட்ட நடப்பட்டிருக்கும் சிவப்புக் கொடி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.