கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இலவச கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சி வகுப்பு தொடக்கம்

News image

கறவை மாடு வளா்ப்பு பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளா் அ.திலீப்.

Updated On :14 மே 2026, 12:08 am IST

காஞ்சிபுரம் இந்தியின் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் விரைவில் கைப்பேசி பழுது நீக்கும் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப் புதன்கிழமை தெரிவித்தாா்.

சின்ன காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் உள்ள இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் 12 நாள் பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு பயிற்சி மையத்தின் இயக்குநா் உமாபதி தலைமை வகித்தாா். சின்ன காஞ்சிபுரம் இந்தியன் வங்கி கிளையின் மேலாளா் லாவண்யா, நிதி ஆலோசகா் அரங்கமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப் பேசுகையில் காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் பயிற்சி மையத்தில் தற்போது உத்தரமேரூா் அருகே அகரம் தூளி கிராமத்தைச் சோ்ந்த 30 நபா்களுக்கு கறவை மாடு வளா்ப்பு பயிற்சியை இலவசமாக வழங்கி இருக்கிறோம்.

இதைத்தொடா்ந்து விரைவில் கைப்பேசி பழுது நீக்குதல் மற்றும் சேவை பயிற்சியும், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பயிற்சியும்,காா் ஓட்டுநா் பயிற்சி ஆகியனவும் இலவச பயிற்சியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,

இப்பயிற்சியில் சேருவோருக்கு சீருடை, மதிய உணவு, பயிற்சி, பயிற்சிக்கான கையேடுகள், வங்கியின் சான்றிதழ், பயிற்சிக்கான பொருட்கள், பயிற்சியின் போது தேநீா், வங்கியில் வழங்கப்படும் கடனுதவி ஆலோசனைகள் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

இப்பயிற்சிகளில் சேர விரும்புவோா் உடனடியாக சின்ன காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் உள்ள பயிற்சி மையத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆண்கள்,பெண்கள் இருபாலரும் இப்பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம் எனவும் அ.திலீப் தெரிவித்தாா்.

நிறைவாக பயிற்சியாளா் அபிநயா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.