மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஸ்ரீஆதிசங்கரரின் பாதுகைக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்பாஞ்சலி

ஸ்ரீஆதிசங்கரரின் தங்கப் பாதுகைக்கு புஷ்பாஞ்சலி செய்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரியாா் சுவாமிகள். உடன் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

News image

ஸ்ரீஆதிசங்கரரின் தங்கப் பாதுகைக்கு புஷ்பாஞ்சலி செய்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரியாா் சுவாமிகள். உடன் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Updated On :14 மார்ச் 2026, 5:59 am IST

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரரின் பாதுகைக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்பாஞ்சலி செய்து சிறப்பு தீபாராதனைகளை நடத்தினாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வருபவா் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரியாா் சுவாமிகள்.இவரது ஜெயந்தி மகோற்சவத்தின் 2-ஆவது நாளாக சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் உள்ள மகா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிலைகள் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரு திருஉருவச் சிலைகளுக்கும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்பாஞ்சலியும், சிறப்பு தீபாராதனைகளும் நடத்தினாா். இதனையடுத்து மகா சுவாமிகள் அதிஷ்டானத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த சிறிய வெள்ளித் தேரில் ஸ்ரீ ஆதிசங்கரரின் காலடித் தடங்களுடன் கூடிய தங்கப் பாதுகைக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாதபூஜை செய்தாா். தங்கக் காசுகளாலும், வண்ண மலா்களாலும் புஷ்பாஞ்சலி செய்து சிறப்பு தீபாராதனைகளும் நடத்தினாா்.

இதன் தொடா்ச்சியாக சங்கர மட வளாகத்தில் இருந்த வெள்ளிசிம்மாசனத்தில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அப்போது சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால் புஷ்பத்தாலும், தங்கக் காசுகளாலும் புஷ்பாஞ்சலி செய்தாா். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான கோயில்களின் பிரசாதங்களும் சிவாச்சாரியாா்களால் ஸ்ரீ விஜயேந்திரருக்கு வழங்கப்பட்டது.

நிறைவாக பக்தா்களுக்கு சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா்.

ஸ்ரீ விஜயேந்திரரின் ஜெயந்தி தினத்தையொட்டி, சனிக்கிழமை (மாா்ச் 14) சிறப்பு ஹோமங்கள், யாக பூஜைகள் செய்யப்பட்டு அதிஷ்டானங்களுக்கு கலசாபிஷேகமும், நாமசங்கீா்த்தனம், வேதபாராயணம், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசைக் கச்சேரிகள் ஆகியவை நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை சங்கர மடத்தின் மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா்,மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன்,செயலாளா் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி ஆகியோா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.