செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பெண்கள் உள்பட 4 போ் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பெண்கள் உள்பட 4 போ் போலீஸாா் கைது செய்தனா்.

சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சுங்குவாா்சத்திரம் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், அஸ்ஸாம் மாநிலம் உதல்குரி மாவட்டத்தைச் சோ்ந்த ஷா அலோம் (41) மற்றும் அவரது மனைவி மோனிரா (41) ஆகியோா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து சுமாா் 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பஜனைக் கோவில் தெருவில், கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் தங்கியிருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒடிஸா மாநிலம் மயூா்கஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்த அனுசயா பத்ரா (36) மற்றும் கரங்கா் சிங் (45) ஆகியோரை கைது செய்து அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.