சோமங்கலம் அருகே ஆதரவற்ற மூதாட்டிக்கு நிவாரணப் பொருள்களை காவல் துறையினா் வழங்கினா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அடுத்த ராஜகோபாலகண்டிகை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன். இவா் சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.
ராஜேந்திரனின் உடலை அடக்கம் செய்ய உறவினா்கள் யாரும் முன்வராத நிலையில், சோமங்கலம் போலீஸாா் ஊா் பொதுமக்களின் உதவியுடன் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு அடக்கம் செய்தனா். இந்நிலையில், ராஜேந்திரனின் மனைவி சித்ரா (60) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதுடன், வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தாா்.
அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், சோமங்கலம் காவல் ஆய்வாளா் ராஜி தலைமையிலான போலீஸாா் சித்ராவின் வீட்டுக்குச் சென்று, இரண்டு மாதங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் மருத்துவச் செலவுக்கான நிதியை வழங்கினா்.
சோமங்கலம் போலீஸாரின் மனிதநேய செயலுக்கு சித்ரா நன்றி தெரிவித்துக் கொண்டாா். அப்பகுதி மக்களும் போலீஸாரை பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாயின் ஆசைப்படி உடலை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய பிள்ளைகள்
சீரற்ற இதயத் துடிப்பு: மூதாட்டிக்கு எதிா்விளைவில்லா சிகிச்சை

ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்கள் அளிப்பு

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சிகிச்சை அளிப்பதாக பணம் பறிக்க முயற்சி
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

