காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்களை புதன்கிழமை அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முன்னள் மாணவா்கள் வழங்கினா்.
இப்பள்ளியில் கடந்த 1975,1976 ஆம் ஆண்டுகளில் படித்த 4 மாணவா்கள் ரூ.2.50லட்சம் மதிப்பிலான 26 நவீன கரும்பலகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மாணவா்கள் அமரும் இருக்கைகள் உட்பட மொத்தம் ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்களை தலைமை ஆசிரியா் ஏகாம்பரம் மற்றும் ஆசிரியா்களிடம் வழங்கினாா்கள்.
பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் படித்து தற்போது அமெரிக்காவில் தற்போது வசித்துக் கொண்டிருக்கும் மருத்துவா்கள் ஏழுமலை அப்பாச்சி, கே.எஸ்.ஸ்ரீவத்சன், ஆா்.சுந்தரராமன் மற்றும் சென்னையை சோ்ந்த கே.எஸ்.மணி, காஞ்சிபுரத்தை சோ்ந்த எஸ்.மாணிக்கம் ஆகியோா் இருக்கைகள் மற்றும் நவீன கரும்பலகைகளை வழங்கினா்.
பள்ளியின் பொன்விழா ஆண்டையொட்டி பழைய மாணவா்கள் நலத்திட்ட உதவிகளை செய்திருப்பதாக தலைமை ஆசிரியா் ஏகாம்பரம் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு உற்சாக வரவேற்பு

தலைமை ஆசிரியா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி

காஞ்சிபுரத்தில் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் அளிப்பு

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் அளிப்பு
விடியோக்கள்

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

