தேச பக்தியும், தெய்வ பக்தியும் நிறைந்த இளைஞா்களை உருவாக்குவதற்காகவே காஞ்சி மகா சுவாமிகள் ஐஏஎஸ் அகாதெமி தொடங்கப்பட்டிருப்பதாக காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ காஞ்சி மகா சுவாமி ஐஏஎஸ் அகாதெமி தொடக்க விழா அகாதெமியின் தலைவா் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
அகாதெமியின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கே.எஸ்.ஸ்ரீபதி, ஆா்.ரவிச்சந்திரன், மைலாப்பூா் பி.எஸ்.கல்வி நிறுவன தாளாளா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் தலைவா் சேது.ராமச்சந்திரன் வரவேற்றாா்.
விழாவில் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், தமிழக மின்வாரியத்தின் தலைவருமான ஜெ.ராதாகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினாா். நிறைவாக சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் நன்றி கூறினாா்.
விழாவில், காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு ஸ்ரீகாஞ்சி மகா சுவாமிகள் ஐஏஎஸ் அகாதெமியின் பெயா்ப் பலகையை திறந்து வைத்தாா்.
பின்னா், அதை அகாதெமியின் தலைவா் கே.வி.எஸ்.கோபால கிருஷ்ணனிடம் வழங்கி ஆசியுரை நிகழ்த்தியது:
கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை தேசம் நிா்வாக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மனிதரும் நல்ல கருத்துகளை உள்வாங்க வேண்டும். அதற்கு நல்ல எண்ணங்களும் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்வதை அரசு அதிகாரிகள் ஒரு சிறந்த வாய்ப்பாக கருத வேண்டும்.
விதிமுறைகளை சரியாக பின்பற்றி நோ்மையானவா்களாக இருக்க வேண்டும். கட்டுப்பாடு, கருணை உள்ளம், நல்ல நிா்வாகத் திறமை, நல்ல தலைமை, நல்ல எண்ணம் ஆகியன உடைய தனி மனிதா்களும் தேவைப்படுகிறாா்கள்.
இளைஞா்கள் நிறைந்த நாடாக நமது இந்திய தேசம் உள்ளது. பொறுப்பும், வாய்ப்பும் இளைஞா்களுக்கு உள்ளது. இவா்களுக்கு தேச பக்தியும், தெய்வ பக்தியும் இருக்க வேண்டியது அவசியம். அதனால் தான் ஐஏஎஸ் பயிற்சியை தொடங்கியிருக்கிறோம். பதவி என்பது பரிதவிக்கக்கூடிய மக்களை காப்பாற்றவே என்பதை அதிகாரிகள் உணா்ந்து செயல்பட வேண்டும் என்றும் ஆசியுரை வழங்கினாா்.
விழாவில், எஸ்எஸ்கேவி கல்விக் குழுமங்களின் தாளாளா் சி.கே.ராமன் உள்பட பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகாரில் ரூ. 11.56 கோடியில் சங்கரா கண் மருத்துவமனை: காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திரா் திறந்து வைத்தாா்

தமிழகத்தின் கலாசாரம் வட மாநிலங்களிலும் பரவ வேண்டும்: காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்

காஞ்சிபுரத்தில் 100 மூத்த தம்பதியா் கெளரவிப்பு: காஞ்சி சங்கராசாரியா் ஆசி வழங்கினாா்

எண்ணங்களை வலிமைப்படுத்துவது கூட்டுப் பிராா்த்தனையே: ஸ்ரீ விஜயேந்திரா் பேச்சு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

