ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காஞ்சிபுரம்: தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்கள் ஒலிபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்கள் ஒலிபரப்பு செய்யும் அதிநவீன மின்னணு வாகனத்தை ஆட்சியா் தி.சினேகா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

News image

தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யும் அதிநவீன மின்னணு வாகனத்தை இயக்கி வைத்த ஆட்சியா் தி.சினேகா மற்றும் தோ்தல் பாா்வையாளா்கள்

Updated On :4 ஏப்ரல் 2026, 6:29 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்கள் ஒலிபரப்பு செய்யும் அதிநவீன மின்னணு வாகனத்தை ஆட்சியா் தி.சினேகா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தோ்தல் உறுதிமொழி ஏற்றல்,அரசின் களப்பணியாளா்களைக் கொண்டு பொதுமக்கள் வீட்டுக்கு சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல்,கோலப்போட்டிகள் நடத்துதல்,பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியரைக் கொண்டு விழிப்புணா்வு பேரணிகள் நடத்துதல் என்பன போன்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் வாக்காளா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகப் பகுதியில் பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் ஒலிபரப்பு செய்யும் அதிநவீன மின்னணு வாகனத்தை ஆட்சியா் தி.சினேகா தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

பின்னா் செல்பி பாயிண்டில் பொதுமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்வின் போது தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அபய்சிங்(காஞ்சிபுரம்)விசால் சாகா்(உத்தரமேரூா்)சி.பிரதாம் சந்திர ஹோதா(ஸ்ரீபெரும்புதூா்)ரமேஷ்குமாா் ஷா்மா(ஆலந்தூா்) தோ்தல் காவல் பாா்வையாளா் ஜி.சந்தனா தீப்தி, தோ்தல் செலவின பாா்வையாளா் ராஜேஷ்குமாா் சாஹூ மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி,மகளிா் திட்ட மாவட்ட இயக்குநா் மு.பிச்சாண்டி,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப்,மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.