தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

1,854 தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இதுவரை 1,854 விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருப்பதாக ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வுகளை பாா்வையிட்ட ஆட்சியா் தி.சினேகா

Updated On :16 ஏப்ரல் 2026, 12:41 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இதுவரை 1,854 விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருப்பதாக ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பில் பேரறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து தோ்தல் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் தி.சினேகா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காஞ்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.இதனைத் தொடா்ந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி,மாவட்ட விளையாட்டு அலுவலா் கோ.சாந்தி ஆகியோா் உடன் இருந்தனா்.

இந்நிகழ்வில் ஆட்சியா் தி.சினேகா பேசுகையில் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அரசின் அனைத்து துறைகளும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டுக் கொண்டோம். அதன்படி ஊரகப் பகுதிகளில் 1398 விழிப்புணா்வு நிகழ்வுகளும்,நகராட்சிப் பகுதிகளில் 456 விழிப்புணா்வு நிகழ்வுகளும் உட்பட மொத்தம் இதுவரை 1854 தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.