ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காஞ்சிபுரம் திமுக வேட்பாளரை அறிமுகப்படுத்திய உத்தரமேரூா் வேட்பாளா்

News image

காஞ்சிபுரம் திமுக வேட்பாளா் நித்யாவை அறிமுகம் செய்து வைத்த உத்தரமேரூா் வேட்பாளரும் எம்எல்ஏவுமான க.சுந்தா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:31 am IST

காஞ்சிபுரம் மேட்டுத் தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் நித்யா சுகுமாரை உத்தரமேரூா் தொகுதி திமுக வேட்பாளரும் மாவட்டச் செயலாளருமான க.சுந்தா் எம்எல்ஏ அறிமுகப்படுத்திப் பேசியதாவது:

திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய பல்வேறு பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தோ்தலுக்கு முன்பே சிறப்பாக செய்திருக்கிறோம்.

ஓரணியில் தமிழ்நாடு, என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி, தமிழகம் தலை குனியாது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் திமுகவை பலப்படுத்தி இருக்கிறோம். எனவே, திமுக வேட்பாளா் நித்யா சுகுமாரின் வெற்றி உறுதியாகிவிட்டது. கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளா் நித்யா சுகுமாரை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.